Monday, 20th May 2024
ebook தொடர்புக்கு : +91 - 9444983174
சென்னை: தமிழகத்தில் மேலும் 74 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டதை தொடர்ந்து, பாதிப்பு அடைந்தோர் எண்ணிக்கை 485 ஆக அதிகரித்துள்ளது.
கொரோனா வைரசை கட்டுப்படுத்தும் வகையில் இந்தியாவில் 21 நாட்கள் ஊடரங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.
தமிழகத்தில் கடந்த சில தினங்களாக கொரோனா வைரசால் பாதிப்பு அடைந்தவர்கள் எண்ணிக்கை தொடர்ந்து அதிகரித்து வருகிறது.
டெல்லி நிஜாமுதீன் பகுதியில் மார்ச் 13 முதல் 15-ம் தேதி வரை தப்லிகி ஜமாத் என்ற இஸ்லாமிய மத அமைப்பு சார்பில் கூட்டம் நடைபெற்றது. இதில் தமிழகத்தில் இருந்து 1500 பேர் கலந்து கொண்டனர்.
இதற்கிடையே, தமிழகத்தில் கொரோனா வைரசால் தாக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை தொடர்ந்து அதிகரித்து நேற்று 411 ஆக இருந்தது.
இந்நிலையில், தமிழகத்தில் மேலும் 74 பேருக்கு இன்று கொரோனா வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதில் 73 பேர் டெல்லி மாநாட்டில் கலந்து கொண்டவர்கள்.
இதையடுத்து, கொரோனா பாதித்தவர்களின் எண்ணிக்கை 485 ஆக உயர்ந்துள்ளது. மொத்தம் 485 பேரில் 422 பேர் டெல்லி மாநாட்டில் பங்கேற்றவர்கள் என சுகாதாரத்துறை செயலாளர் பீலா ராஜேஷ் தெரிவித்துள்ளார்.